Friday, January 21, 2011

டாக்சி டிரைவர்?

ஒருத்தன் டாக்ஸில பின்னால உக்காந்து போயிட்டு இருக்கும்போது டாக்சி டிரைவர்ட்ட எதோ கேக்கனும்னு தோனுச்சி.

டிரைவர் ரொம்ப கவனமா ரோட்டை பார்த்து ஓட்டிட்டு இருந்தான். பின்னால இருந்து எதுவும் பேசாம டிரைவர் தோளை தொட்டான்.

டிரைவர்க்கு தூக்கி வாரி போட்டது. கட்டுப்பாடை இழந்து டாக்ஸிய ஒட்டி யார் மேலயும் இடிக்காம ஒருவழியா பள்ளத்துல இறக்கி வண்டிய நிறுத்தினான்.

பின்னால உக்காந்து இருந்தவன் பயந்து நடுங்கி சாமிய எல்லாம் வேண்டிட்டு இருந்தான். டிரைவர்ட்ட சாரி கேட்டான்.

டிரைவர், 'எதுக்கய்யா வண்டி ஓட்டிட்டு இருக்கும்போது என் தோளை தொட்ட?' என்று கேட்டான்.

அவன், 'உன்னை பாத்தா அனுபவமுள்ள டிரைவர் போல தெரியுது. ஆனா தோளை தொட்டதுக்கு நீ இப்படி ஷாக் ஆவேன்னு எதிர்பாக்கலை. ' என்றான்.

உடனே டிரைவர், 'இல்ல சார், எனக்கு இந்த டாக்சி டிரைவர் வேலை புதுசு. நீங்க தான் முதல் சவாரி' என்றதும் அவன், 'அய்யோ இதுக்கு முன்னாடி வண்டியே ஒட்டினது இல்லையா ' என்று பயந்தான்.

டிரைவர், 'இதுக்கு முன்னாடி பிண வண்டி தான் ஒட்டி இருந்தேன். அதான் நீங்க தோளை தொட்டதும் பழைய நினைப்புல பயந்து போயிட்டேன்' என்றான்.

No comments:

Post a Comment