Friday, January 21, 2011

யாரோடு யார் படுப்பது?

ஒரு பாகிஸ்தானி, இந்தியன், அமெரிக்கன் மூன்று பேரும் லண்டனில் இருந்து காரில் பயணம் செய்தபோது வழியில் கார் மக்கர் ஆகி நின்றுவிட்டது.

நடுராத்திரி ஆகிவிட்டதால் பக்கத்து கிராமத்தில் தங்கி காலையில் போகலாம்னு முடிவு செய்து மூணு
பேரும் ஒரு விவசாயி வீட்டு கதவை தட்டினாங்க.

விவசாயி, 'வீட்டுக்குள்ள ரெண்டு பேர் தான் படுக்க இடம் இருக்கு, ஒருத்தர் வெளிய கழனியில தங்கிக்கோங்க' என்றார்.

சரின்னு பாகிஸ்தானி வெளிய கழனிக்கு போனான். கொஞ்ச நேரம் கழிச்சி கதவு தட்டப்பட்டது.

விவசாயி கதவை திறந்தப்போ பாகிஸ்தானி,'கழனியில பன்றி ஒண்ணு இருக்கு, என்னால அதுகூட படுக்க முடியாது' என்று சொல்ல இந்தியன், 'சரி நான் போய் படுத்துகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளிய கழனிக்கு போனான்.

கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடி கதவு தட்டப்பட்டது.

விவசாயி கதவை திறந்தப்போ இந்தியன், 'பன்றி கூட படுத்துக்கலாம், ஆனா கழனியில மாடு ஒண்ணு இருக்கு, என்னால மாடு கூட படுக்க முடியாது' என்று சொல்ல அமெரிக்கன், 'நான் போறேன்' என்று வெளிய போனான்.

கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடி கதவு தட்டும் சத்தம் கேட்டது.

விவசாயி கோபமா கதவு திறந்தப்போ அங்கே அமெரிக்கனை காணோம்.

பன்றியும் மாடும் நின்று இருந்தது.

இரண்டும், 'நாங்க அவனோடு படுக்க மாட்டோம்' என்றது.

1 comment:

  1. செம காமடி - இதைவிட கேவலம் வேறு என்ன

    ReplyDelete