Wednesday, January 12, 2011

கடவுள் வரம்

ஒரு அறிவாளிக்கு குழந்தை இல்லை.. வசதி இல்லை..சொந்த வீடு இல்லை.. அவனை பெற்ற கண்ணில்லா அவன் தாய் கடவுளை பிராத்தித்த போது, கடவுளே மனசு இறங்கி அறிவாளியிக்கு காட்சி தந்தார்..

கடவுள்:- உன் தாயாரின் தவத்தை மெச்சினோம்..அதனால் உனக்கு ஒரே ஒரு வரம் கொடுக்கிறேன்..என்ன வேண்டும் என்று கேள் மகனே..


அறிவாளி:- நன்றி கடவுளே.. எனக்கு ஒரே ஒரு வரம் போதும்..அதிலயே என் வாழ்க்கை சுபிட்சமாகும்..

கடவுள்:- ஒரே ஒரு வரத்தில் எப்படி உன் எல்லா குறையும் நிவர்த்தி ஆகும்? தெரியவில்லையே..கேள் பாக்கலாம்..

அறிவாளி:- என்னுடைய சொந்த வீட்டில் என் அம்மா, என் பொண்டாட்டி அவள் குழந்தைக்கு வைர மோதிரம் போடுவதை பார்க்க வேண்டும் கடவுளே..

கடவுள்:- ?????????

No comments:

Post a Comment