ஒரு சின்ன பொண்ணு தன் அப்பாவிடம் மனிதகுலம் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்டாள்.
அப்பா, 'ஆதாம் ஏவாள் மூலமாக ஒவ்வொரு மனிதனாக பிறக்க ஆரம்பித்தான்...எனவே ஆதாம், ஏவாள் தான் மூலக் காரணம் ' என்று சொன்னார்.
சின்ன பொண்ணு இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டாள்.
அம்மா, 'குரங்கில் இருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான். எனவே குரங்கு தான் மனிதகுலத்தின் மூலக் காரணம்' என்று சொன்னாள்.
சின்ன பொண்ணு குழம்பி விட்டாள்.
மறுபடியும் அப்பாவிடம் வந்து கேட்டாள். 'ஏன்ப்பா உங்க ரெண்டு பேர் பதிலும் வித்யாசமா இருக்கு' என்று கேட்டாள்.
உடனே அப்பா, 'அது ஒன்னுமில்லைடா குட்டி, நான் என் வழி குடும்பத்தை பத்தி சொன்னேன்.. உங்க அம்மா அவ குடும்பம் தோன்றிய மூலத்தை பத்தி சொல்லுறா...' என்றார்.
No comments:
Post a Comment