Sunday, December 26, 2010

நக்கல் மாணவன்..

ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.

ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..

 
மாணவன்:- கரண்ட் இல்ல சார்...

 
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..

 
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..

 
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..

 
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..

 
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?

 
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..

 
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..

 
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..

 
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..

 
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..

 
ஆசிரியர்:-????????????!!!!

No comments:

Post a Comment