Wednesday, December 22, 2010

பதில் இல்லாத கேள்வி

ஒரு டாஸ்மாக் பாரில் இருவர்...

ஒருவன்:- ஏன்டா மச்சான் கவலையா இருக்க..?

மற்றொருவன்:- மச்சான் நான் ஒரு விதவைய கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல..அவளுக்கு ஒரு பொண்ணுடா..எனக்கு மகள் மாதிரி...அவள போய் எங்க அப்பன் கட்டிகிட்டான்டா..அதனால என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா என் அப்பன் எனக்கு மருமகன் ஆயிட்டான்டா..நான் என் அப்பனுக்கு மாமனார் ஆயிட்டேன்டா..என் மகள் எனக்கு அம்மா ஆனதால என் பொண்டாட்டி எனக்கு பாட்டி ஆயிட்டா.. நாளைக்கே எனக்கு ஒரு மகன் பிறந்தா எனக்கு மாமன் ஆயிடுவான்.. என் அப்பனுக்கு ஒரு மகன் பிறந்தா அவன் எனக்கு தம்பியா இல்லை பேரனா...மச்சான்..?

ஒருவன்:- அடப்பாவி...உன் குடும்ப குழப்பத்த சொல்லி ஏறின போதையை எல்லாம் இறக்கிட்டியேடா..

மற்றொருவன்:- பதில சொல்லுடா...


ஒருவன்:- இந்த கேள்விக்கு உலகத்துல யாராலுமே பதில் சொல்ல முடியாதுடா...ஆள விடு..
 


(எஸ்கேப்..)

No comments:

Post a Comment