Monday, February 21, 2011

நடந்தது என்ன?

மனோவும் சிவாவும் செத்ததுக்கு அப்புறம் மேலோகத்துல சந்திச்சு பேசிட்டு இருந்தாங்க..

மனோ : வணக்கம்.. நீங்க எப்படி செத்தீங்க..

சிவா : நான் குளிர்ல நடுங்கி செத்துட்டேன்..

மனோ  : அச்சச்சோ.. நீங்க சாகும்போது எப்படி இருந்தது..

சிவா : ஐயோ.. அத ஏன் கேக்குறீங்க.. உடம்பு எல்லாம் பயங்கரமா நடுங்குச்சு.. விரல் எல்லாம் பயங்கர வலி.. உடம்பு விரைச்சு  மயக்கமாகி செத்து போயிட்டேன்.. அது போகட்டும் நீங்க எப்படி செத்தீங்க..

மனோ
: ஒருநாள் என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றான்னு போன் வந்துச்சி. சரி அவள கையும் களவுமா பிடிக்கலாமன்னு ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வீட்டுக்கு போனேன்.. போய் பெட் ரூம்ல பாத்தேன்.. அவ தனியாதான் இருந்தா.. வீடு முழுக்க தேடி பாத்தேன்.. இவள தவிர யாரும் இல்ல.. தேவை இல்லாம என்னோட பத்தினி தெய்வத்தை தப்பா நினைச்சிடோம்ன்னு  மனசு ரொம்ப கஷ்டமாகி அன்னிக்கு நைட்டு தூங்கும்போதே நெஞ்சு வலி வந்து செத்து போயிட்டேன்..

சிவா : எல்லாம் தலை விதி படிதான் நடக்கும்..

மனோ : எதுக்கு திடீர்னு அப்படி சொல்றீங்க..

சிவா : அடங்கோத்தா.. பரதேசி நாயே... வீடு புல்லா தேடினியே.. அந்த பாழா போன பிரிட்ஜ கொஞ்சம் தொறந்து பாத்து இருந்தா இன்னைக்கு ரெண்டு பேருமே உயிரோட இருந்து இருக்கலாமே...

மனோ :  ??????????????????
நன்றி:- m.s.s

No comments:

Post a Comment