Friday, February 4, 2011

அடக்கடவுளே

ஒரு நல்லவனும் கெட்டவனும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கெட்டவன், 'அடங்கோத்தா, ஒழுங்கா பந்தை புடிடா' என்று சொன்னான்.

உடனே நல்லவனுக்கு கோபம் வந்தது. கெட்டவன் 'அடங்கோத்தா' என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பான்.

நல்லவன்,'என்னடா இது சும்மா பேச்சுக்கு பேச்சு அடங்கோத்தா சொல்லிட்டு இருக்க' என்று கேட்டான்.

கெட்டவன், 'அது பழக்கம் ஆயிடுச்சிடா, மாத்திக்க முடியல' என்றான்.

நல்லவன், 'உன் பழக்கம் எனக்கு அசிங்கமா இருக்
குடா
, என்னை நீ அப்படி திட்டுறது எனக்கு அவமானமா இருக்கு, இனிமே அப்படி திட்டினா விஷ்ணு பகவான்கிட்ட சொல்லிடுவேன்' என்றான்.

உடனே
கெட்டவன், 'போடாங்கோத்தா, போய் சொல்லிக்கோ, எனக்கு என்ன பயமா' என்றதும் நல்லவன் விஷ்ணு பகவானிடம் முறையிட்டான்.

உடனே விஷ்ணு நல்லவன் முன் தோன்றினார்.

நல்லவன், 'அவன் சும்மா என்னை திட்டிகிட்டே இருக்கான் சாமி, அவனுக்கு நீங்க தான் சரியான தண்டனை கொடுக்கணும்' என்றான்.

சரி வா என்று விஷ்ணு நல்லவனை கூட்டிக்கொண்டு தன் கையில் இருந்த சக்கராயுதத்தை கெட்டவனின் தலையை குறி பார்த்து விட்டார்.

தூரத்தில் நின்று இருந்த கெட்டவன் சட்டென்று திரும்ப மயிர் இழையில் கெட்டவன் தலையை உராசி கொண்டு சக்கரம் சுழண்டு கொண்டே சென்றது.

உடனே விஷ்ணு பகவான், '
த்தா...just missடா' என்று சொல்ல நல்லவன் மயக்கமானான்.

No comments:

Post a Comment