Wednesday, February 16, 2011

என்ன ஒரு ஒற்றுமை?

மனோ பசு மாட்டு பண்ணை வச்சி இருந்தான். ஒருநாள் தண்ணி அடிக்க பாருக்கு போய் விஸ்கி ஆர்டர் பண்ணிட்டு உக்காதான்.. பக்கத்துலே ஒரு பிகரும் எதையோ ஆர்டர் பண்ணிட்டு உக்காந்துட்டு இருந்தா.. 

முதல்ல பரஸ்பரம் ஒரு புன்னகையில ஆரம்பிச்ச இவங்க அப்புறம் பேச ஆரம்பிச்சாங்க..

பிகரு :- நான் ஒரு விஸ்கி ஆர்டர் பண்ணி இருக்கேன்.. நீங்க?

மனோ :- என்ன ஒற்றுமை நமக்குள்ள.. நானும் விஸ்கிதான் ஆர்டர் பண்ணி இருக்கேன்.. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் அதானால தண்ணி அடிக்க வந்து இருக்கேன்..

பிகரு :- எனக்கும் இன்னைக்கு ரொம்ப சந்தோசமான நாள்.. அதனாலதான் நானும் தண்ணி அடிக்க வந்து இருக்கேன்..

மனோ :- என்ன ஒற்றுமை நமக்குள்ள.. என்ன விஷயம்னு தெரிஞ்சா நானும் உங்க சந்தோசத்துல பங்கு எடுத்துக்குவேன்..

பிகரு :- ரொம்ப வருஷமா நானும் என்னோட புருஷனும் குழந்தை வேண்டி தவமா தவம் இருந்தோம்.. இன்னைக்கு டாக்டர்கிட்ட செக் பண்ணப்போ நான் கர்பமா இருக்கறதா சொன்னாங்க.. அதுதான் என்னோட சந்தோசத்துக்கு காரணம்..

மனோ :- என்ன ஒரு ஒற்றுமை நமக்குள்ள.. நான் ஒரு மாட்டு பண்ணை வச்சி இருக்கேன்.. என்னோட மாடு எல்லாம் ரொம்ப நாளா சினை ஆகாம இருந்தது.. இன்னைக்கு பத்து மாடு சினையா இருக்கு.. அதான் என்னோட சந்தோசத்துக்கு காரணம்..

பிகரு :- சந்தோசம்.. ரொம்ப நாளா சினை ஆகாம இருந்த மாடுங்கன்னு சொல்றீங்க.. இப்ப எப்படி திடீர்னு ஆச்சு?

மனோ :- என்னோட காளை மாடை விட்டுட்டு வேற காளை மாடு மூலமா சினையாக்க வச்சேன்..

பிகரு :- ஆஹா.. .. என்ன ஒற்றுமை நமக்குள்ள.. 

மனோ :-????????????
நன்றி:-m.s.s 

No comments:

Post a Comment