Saturday, April 2, 2011

குருடன்?

அந்த காம்பவுண்டுக்குள்ள நான்கு வீடுகள் இருந்துச்சி.

முதல் வீட்டுல ஒரு அழகான பொண்ணு தனியா குடியிருந்தாள்.

இரண்டாவது வீட்டுல ஒரு வக்கீல் குடியிருந்தார்.

மூணாவது வீட்டுல தீயணைப்பு துறை வீரன் ஒருத்தன் இருந்தான்.

கடைசி வீட்டுல ரெண்டு கண்ணும் தெரியாத ஒரு குருடன் இருந்தான்.

ஒருநாள் அந்த பொண்ணு எல்லாத்தையும் அவுத்துட்டு டவலை கட்டிக்கிட்டு தன் வீட்டுக்குள்ள குளிக்க போனா. டவலை அவுத்துட்டு தண்ணிய உடம்புல ஊத்த போன போது கதவு தட்டப்பட்டது.

டவலை எடுத்து உடம்புல சுத்திகிட்டு வந்து கதவை திறந்தா.

தீயணைப்பு துறை வீரன் கையில சாக்லேட் வச்சிட்டு நின்னுட்டு இருந்தான். 'எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு' என்று சொன்னான்.

சாக்லேட்டை எடுத்துகொண்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு டவலை கழட்டி போட்டு தண்ணியை ஊற்ற போனாள். மறுபடியும் கதவு தட்டப்பட்டது.

மறுபடியும் டவலை கட்டிக்கொண்டு போய் கதவை திறக்க வக்கீல் கையில் ஸ்வீட் பாக்ஸோடு நின்று இருந்தான். 'நான் ஒரு கேசுல ஜெயச்சுட்டேன்..ஸ்வீட் எடுத்துகோங்க' என்றான்.

ஸ்வீட் எடுத்துகொண்டு கதவை சாத்திவிட்டு டவலை கழட்டிவிட்டு தண்ணீரை எடுத்து உடம்பு மேலே ஊற்ற போனாள். மறுபடியும் கதவு தட்டப்பட்டது.

காம்பவுண்டுக்குள் இருந்த தீயணைப்பு துறை வீரன், வக்கீல் இருவரும் ஏற்கனவே வந்து விட்டார்கள். எனவே இது அந்த குருடனாக தான் இருக்கும் என்று நினைத்து டவலை உடம்பில் கட்டி கொள்ளாமல் நிர்வாணமாக வந்து கதவை திறந்தாள்.

குருடன் தான் நின்று இருந்தான். குருடன் கையில் கேக்கோடு, 'நேத்து தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சது மேடம்..எனக்கு இப்போ கண் பார்வை வந்துடுச்சி.. கேக் எடுத்துக்கோங்க' என்றான்.

No comments:

Post a Comment