Thursday, May 12, 2011

பொண்ணுக்கு எது முக்கியம்?

ஒரு வாட்டசாட்டமான பையன் ஒருத்தனை மூணு பெண்கள் காதலிக்கறதா சொன்னாங்க. மூணு பெண்களும் அழகா இருந்ததுனால யாரை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு அந்த பையனுக்கு குழப்பமா இருந்துச்சி.

அதனால மூணு பெண்களுக்கும் ஒரு போட்டி வச்சி முடிவு எடுக்கலாம்னு நினைச்சான். மூணு பெண்களையும் கூப்பிட்டு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து, 'இதை நீங்க மூணு பெரும் எப்படி செல்வாவு செய்ய போறீங்கன்னு பாத்துட்டு தான் யாரை கல்யாணம் செஞ்சிக்கிரதுன்னு நான் முடிவு செய்ய முடியும்' என்று சொன்னான்.

முதல் பெண் ஒரு பெரிய பியுட்டி பார்லர் போய் தன்னோட உடம்பு முழுக்க பாலிஷ் போட்டு, தலை முடிய கலர் பண்ணிட்டு கவர்ச்சியான விலை அதிகமான டிரஸ் வாங்கி மாட்டி கொண்டு வந்து, 'இது எல்லாம் நான் உன் மேல வச்சிருக்க காதலுக்காக.. நீ என் அழகை அணு அணுவா ரசிக்கனும்னு தான் என்னழகை மேலும் கூட்டிகிட்டு வந்திருக்கேன்' என்று சொன்னாள்.

முதல் பெண்ணின் காதலில் பையனின் மனம் துள்ளியது.


இரண்டாவது பெண் நகை கடைக்கு போய் வைர கல் பதித்த மோதிரம் ஒன்றை வாங்கி வந்து, 'என் அன்பு காதலனுக்கு என் காதலை உணர்த்த இந்த வைர மோதிரத்தை அணிவிக்கிறேன்' என்று சொல்லி வைர மோதிரத்தை அவன் கை விரலில் மாட்டிவிட, பையன் அப்படியே சொக்கி போனான்.

மூணாவது பெண் பேங்க்கு போய் ரெண்டு பேர் பெயர்ளையும் சேமிப்பு கணக்கு அக்கவுண்ட் புதியதாக ஆரம்பித்து அவன் கொடுத்த பணத்தை அக்கவுண்ட்டில் போட்டு விட்டு வந்து பேங்க் பாஸ் புக்கை அவனிடத்தில் கொடுத்து, 'நீ கொடுத்த பணத்தை வேஸ்ட் பண்ணாம நம்ம எதிர்கால வாழ்க்கைக்காக சேமிச்சி வச்சிருக்கேன்' என்று சொல்ல கல்யாணத்துக்கு முன்னாடியே அவளுடிய சிக்கனத்தில் மனம் லயித்தான்.

மூணு பேரும் தன்னை எவ்ளோ ஆழமா காதலிக்கிறாங்க என்பது அவனுக்கு புரிந்தது. மூணு பேருல யாரை செலக்ட் பண்ணலாம்னு இன்னமும் குழப்பமா இருந்துச்சி.

கடைசியா சாதரான மனுஷனா யோசிச்சி பார்த்தான்.

மூணு பேருல யாரோட முலை நல்லா பெருசா இருக்கோ அவளையே கல்யாணம் செஞ்சிக்கிரதுன்னு முடிவு பண்ணிட்டான்.

No comments:

Post a Comment